Tamil News
Home உலகச் செய்திகள்  உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: உலகக் கோப்பையை வென்றது அர்ஜென்டினா

 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: உலகக் கோப்பையை வென்றது அர்ஜென்டினா

36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா.

கத்தார் நாட்டில் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. இதில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த போட்டிதான் மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 120 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் சரி சமமாக 3-3 என்ற கோல் கணக்கில் இருந்தன. அதனால் போட்டியில் முடிவை எட்ட பெனால்டி ஷூட்-அவுட் முறை நடத்தப்பட்டது.

முன்னதாக, இந்த போட்டியின் முதல் 120 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி சார்பில் மெஸ்ஸி 2 கோல்களை பதிவு செய்திருந்தார். அதில் ஒரு கோல் பெனால்டியில் பதிவு செய்யப்பட்டது. அர்ஜென்டினா அணிக்காக மற்றொரு கோலை டி மரியா பதிவு செய்திருந்தார்.

பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்ஸ் அணி முதலில் ஷூட் செய்தது. எம்பாப்பே எந்த தவறும் செய்யாமல் முதல் கோலை பதிவு செய்தார். மறுபக்கம் மெஸ்ஸி தன் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். இருந்தும் அதற்கடுத்த வாய்ப்புகளை பிரான்ஸ் வீண் செய்தது. ஆனால், அர்ஜென்டினா வீரர்கள் பந்தை வலைக்குள் மிக சுலபமாக தள்ளிக் கொண்டிருந்தனர். முடிவில் 4-2 என பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

Exit mobile version