Tamil News
Home செய்திகள் இலங்கை-எதிர்வரும் சிறு போகத்திற்கு நிதி உதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம்

இலங்கை-எதிர்வரும் சிறு போகத்திற்கு நிதி உதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம்

எதிர்வரும் சிறு போகத்திற்கு யூரியா உரத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள உலக வங்கி அலுவலகத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இம்முறை சிறு போக நெற்செய்கைக்குத் தேவையான இரசாயன உரங்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உலக வங்கியின் பிரதிநிதிகள் உரிய நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி அரிசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியினால் வழங்கப்படும் ஆதரவை பாராட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நெல் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை வழங்குவதற்கு உலக வங்கி போன்ற ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version