சீன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது ஏன்? விளக்குகிறார் சுமந்திரன்

சீன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது
“13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை மறுதினம் தமிழ் பேசும் கட்சிகள் பொது உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ள கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சி சமுகமளிக்கும்” என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்’, என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத் தில் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் பங்கேற்று பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்துரைத்த அவர், வடக்கு, கிழக்கில் – தமிழர் தாயகத் தில் சீனா செல்வாக்கு நிலைபெறுவதை நாம் விரும்பவில்லை. சிலர் சீனாவை ஏன் எமக்கு ஆதரவாக சேர்க்கக்கூடாது என்று கேட்கின்றனர். சீனர்களின் செல்வாக்கை வடக்கு, கிழக்கில் நாம் இரு காரணங்களுக்காக விரும்பவில்லை. அதில் ஒன்று – எமது அரசியல் விடிவுக்காக நாம் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவுக்கு தெரியாது.

இரண்டாவது – இலங்கை தென் சீனக் கடலில் தீவாக இருந்திருந்தால், சீனாவின் கடலில் இருந் திருந்தால், அது அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் நியாயமான கரிசனையாக இருந்திருக்கும். ஆனால், இலங்கை இந்தியாவுக்கு அருகில் உள்ள ஒரு தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசனையை நாம் உள் வாங்கியிருக்கிறோம். அதுவும் இந்தியாவுக்கு மிக அண் மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக் கத்தை நாம் விரும்பவில்லை. சீன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது இதனால்தான்.

இப்படி சீனாவின் ஆதிக்கத்தை நாம் இங்கு விரும்பவில்லை என்பதைச் சொல் லித்தான் – சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசனை கொண் டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை (சீன ஆதிக்கத்தை) விரும்ப வில்லை. இதன்போதே வடக்கு, கிழக் கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங் கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப் பது நாங்கள், எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால், எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்கு மானால், நீங்கள் அந்தப் பயத்தைகொள் ளத் தேவையில்லை என்கின்றோம்.

சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால், இவை தொடர் பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனை முன்னிறுத்தியே செயல்படுவார்கள். அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண் ணம்கூட அவர்களுக்கு இருக்கலாம். நாம் அது குறித்தும் விளக்கிக் கூறியுள் ளோம். இங்கே தொடர்ச்சியாக குழப்ப நிலை இருந்தால், இலங்கை அரசிடமே நிலஅதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப் போகின்றன. அது உங்களுக்கும் சாதகம் இல்லை. இதனைத் தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக் கள் தொடர்கின்றன.

இவை படம் எடுத்து முகநூலில் போடும் சந்திப்புகள் அல்ல. அப்படியும் சில இங்கு இடம்பெறுகின்றன. சிலர் செய்கின்றனர். அப்படி அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை. இதேநேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளன. அவை இடம்பெறும்போது தெரியும்’’  என்றார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad சீன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது ஏன்? விளக்குகிறார் சுமந்திரன்