அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது நவுருத்தீவுக்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நவுரு ஆகிய இரு நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன.