நினைவுகூரும் நிகழ்வுகளைத் தடுப்பதன் மூலம் எதனைச் சாதிக்கப் போகின்றீர்கள்- அரசாங்கத்திடம் செல்வம் எம்.பி. கேள்வி

எதனைச் சாதிக்கப் போகின்றீர்கள்

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்து நிறுத்தினால், எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  நேற்று  நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் “இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும்  காவல்துறையினர் கொடுத்து வருகின்றனர்.

எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்து விட்டது, போரில் தனது இனம், மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம் தடுக்கின்றது.

இவ்வாறு தடுப்பதன் மூலம் நீங்கள் எதனைச் சாதிக்கப் போகின்றீர்கள்?“ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.