அரச தலைவர் கோட்டாபயவுடனான பேச்சு குறித்து பரிசீலித்து முடிவெடுப்போம்-இரா.சம்பந்தன்

பரிசீலித்து முடிவெடுப்போம்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சில் பங்கேற்பதா? இல்லையா? என்பதை தாம் பரிசீலித்து முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த 18ஆம் திகதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை நாட்டு மக்களை ஏமாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளது. பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அவர் வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில், அவர் தலைமையிலான அரசாங்கம் எம்மைப் பேச்சு மேசைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தால், அதில் நாம் பங்கேற்பதா அல்லது சர்வதேச மத்தியஸ்தத்துடன் பங்கேற்பதா என்று மிகவும் கவனமாகப் பரிசீலித்து முடிவெடுப்போம்.

ஏனெனில், இந்தக் கருமம் மிகவும் முக்கியமானது. நாம் எதனையும் குழப்பவும் விரும்பமாட்டோம் – அதேவேளை ஏமாறவும் தயாராக இருக்கமாட்டோம்” என்றார்.