Tamil News
Home செய்திகள் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- பிரித்தானியா

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- பிரித்தானியா

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான கூட்டு மற்றும் புதுப்பிக்கப்பட்ட திறனின் மீது தற்போது கவனம் திரும்ப வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

எனவே இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களை அழைப்பதாக பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.

அனைவரும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னர் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version