சிவில் சமூக அமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பதையும் அச்சுறுத்துவதையும் கண்டிக்கின்றோம்-ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி

சிவில் சமூக அமைப்புகளை தொடர்ந்து

“சிவில் சமூக அமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பதையும் அச்சுறுத்துவதையும் கண்டிக்கின்றோம்” என மனித உரிமை பேரவையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் சமீபத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கின்றோம் என்றும் விடுதலைகளை ஊக்குவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து தனது கருத்தை முன்வைத்த நெதர்லாந்து பிரதிநிதி, முன்னைய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறல் இன்மை ஜனநாயக ஸ்தாபனங்கள் நீதித்துறையின் சுதந்திரம் இல்லாமல் போதல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கை மக்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை ஐநாவிற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என  பிரான்ஸ் தூதுவர் மனித உரிமை பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.