Tamil News
Home செய்திகள் வவுனியாவில் போராட்டம்;குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்

வவுனியாவில் போராட்டம்;குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளைத் தங்கியிருந்தனர்.

”இலங்கையில் போர்க் குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்.”,”சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்.”,”எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்.” போன்ற வாசகங்களுடன் ”சுமந்திரன் , சீறீதரனை எதிர்க்கிறோம்.” என்ற பதாகையும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது

Exit mobile version