Home செய்திகள் வவுனியா நகர் முழுவதும் ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’ என பொறிக்கப்பட்ட பதாதைகள்

வவுனியா நகர் முழுவதும் ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’ என பொறிக்கப்பட்ட பதாதைகள்

IMG20210708094814 01 வவுனியா நகர் முழுவதும் 'வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச' என பொறிக்கப்பட்ட பதாதைகள்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற மீள் வருகையடுத்து ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’  பாராளுமன்ற வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் வடக்கின் வசந்தத்தின் மூலம் பொது மக்களின் அபிலாசையினை பெற்ற நாயகனின் பாராளுமன்ற மீள்வருகை என பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகள் வவுனியா நகர் முழுவதும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் ஆதரவு தெரிவித்து இவ்வாறு பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version