Home செய்திகள் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தம்

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தம்

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாதைப்பொங்கல் நாளில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடா வருடம் தைப்பொங் கல் தினத்தன்று வல்வெட்டித் துறை உதயசூரியன் திடலில் நடத்தப்பட்டு வரும் பட்டத் திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், பட்டத் திருவிழா ஏற் பாட்டுக் குழுவினருக்கும் பிரதேச மக்க ளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் பட்டத் திருவிழாவை தற்கால சூழ்நிலையில் இடை நிறுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித் துள்ளனர். இதையடுத்து இம்முறை வல்வெட் டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தப் பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version