ஒமிக்ரான் திரிபு அச்சம்: “தடுப்பு மருந்து கட்டாயமாக்கப்பட வேண்டும்”-ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்

தடுப்பு மருந்தை கட்டாயமாக்க வேண்டும்

கொரோனா மற்றும் அதன் புதிய திரிபான ஒமிக்ரானை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடுப்பு மருந்தை கட்டாயமாக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

“தீவிரமாக பரவக்கூடிய” கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் தடுப்பூசிகள் முக்கியமானதாக இருக்கும்” என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுளா வான்டேர் லெய்ன் தெரிவித்துள்ளார்.

20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தோன்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியுள்ளது.

தற்போதைய சூழலில் ஒமிக்ரான் பாதிப்பு மிதமானதாகவே உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad ஒமிக்ரான் திரிபு அச்சம்: "தடுப்பு மருந்து கட்டாயமாக்கப்பட வேண்டும்"-ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்