இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க அமெரிக்கா உதவும்-அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்

இலங்கையர்களுக்கு இது ஒரு சவாலான நேரம் என தெரிவித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung), இலங்கையில் உள்ள மக்களுக்காக அமெரிக்கா தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung), இந்த சவாலான நேரத்தில் அமெரிக்கா இலங்கை மக்களுக்காக தொடர்ந்து முதலீடு செய்யும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த  இடம் தன்னுடையது அல்ல என்றும் இது உங்கள் இடம் என்றும் தெரிவித்த அவர், இது உங்கள் கனவுகளை அடைய உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு அமெரிக்காவும் இலங்கையும் நண்பர்கள் என்றும் மதிப்புமிக்க ஜனநாயக நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.