ஹைதி நாட்டு அகதிகளை தொடர்ந்து திட்டமிட்ட வகையில் நாடுகடத்தி வரும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள், இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அறிவித்துள்ளது.
ஹைதி அகதிகள் விவகாரத்தில் சர்வதேச சட்டத்தை மீறும் அமெரிக்காவின் செயலைப் பார்க்கும் பொழுது, அமெரிக்கா எந்த தனிப்பட்ட மதிப்பீட்டையும் மேற்கொள்ளாமல் பெரும்பாலும் புலம்பெயர்ந்த கறுப்பினத்தவர்களை துன்புறத்தல் மற்றும் மனித உரிமை மீறல் நிகழக்கூடிய ஆபத்தான சூழலுக்குள் தள்ளுகிறது என ஐ.நா. வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.