Tamil News
Home செய்திகள் வசந்த கரணாகொடவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை

வசந்த கரணாகொடவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு அமெரிக்கா பயணதடை விதித்துள்ளது

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் தளபதியாக பதவிவகித்த காலத்தில்  இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுடன் இலங்கையின் வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக உள்ள வசந்த கரணாகொடவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாக வெளிநாட்டுச்செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச்சட்டம் 2023 இன் பிரிவு 7031 இன் கீழ் வசந்தகரனாகொடவை இந்த பட்டியலில் சேர்ப்பதாக இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் வசந்தகரணாகொடவும் அவரது மனைவி ஸ்ரீமதி அசோக கரனாகொடவும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராhஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வசந்தகரனாகொட பாரிய மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டார் என அரசசார்பற்ற அமைப்புகளும் சுயாதீன விசாரணையாளர்களும் பதிவு செய்த குற்றச்சாட்டுகள் நம்பகதன்மை வாய்ந்தவைபாரதூரமானவை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனிதஉரிமைகளை நிலைநிறுத்துதல் மனிதஉரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருதல் பாதிக்கப்பட்டவர்கள் தப்பியவர்களின் துயரங்களை அங்கீகரித்தல் இலங்கையில் குற்றமிழைத்தவர்களிற்கு எதிராக பொறுப்புக்கூறப்படுதல் போன்றவை குறித்த தனது அர்ப்பணிப்பை அமெரிக்கா மீள வலியுறுத்துகின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version