கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்காவின் கப்பல்

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட P-627 கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627, இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்துவதுடன் இரு நாடுகளின் பகிரப்பட்ட பாதுகாப்பு இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.