இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்கா தகவல்

இலங்கையை சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக  அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரசாந் புலவத்தை என்ற இராணுவ அதிகாரிக்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2008 மே மாதம் பத்திரிகையாளர் கீத் நொயர் சித்திரவதை செய்யப்பட்ட மனிதாபிமான முறையில் நடத்தப்பட்ட கௌரவக்குறைவான முறையில் நடத்தப்பட்ட தண்டிக்கப்பட்ட மனித உரிமை மீறலிற்காக இவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்றும் ஊழலுக்கு எதிரான தினத்தன்றும் சர்வதேச அளவில் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுவதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நிதிதடைகள் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்றும் ஊழலுக்கு எதிரான தினத்தன்றும் சர்வதேச அளவில் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுவதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நிதிதடைகள் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.