இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
800,000 இற்கு மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை மேலே இணைக்கப்பட்டுள்ளது.