ஜேவிபியின் தலைவரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பல்வேறு தரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து வரும் நான் பொருளாதார நெருக்கடிகளிற்கான இலங்கை அரசாங்கத்தின் பேண்தகு அனைவரையும் உள்ளடக்கிய தீர்மானங்களை நோக்கி நகரும் முயற்சிகளிற்கு ஊக்குவிப்பை வழங்கிவருகின்றேன் என ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள அவசரமான சவால்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நான் அனுரகுமார திசநாயக்கவை சந்தித்தேன் என அவர் தெரிவித்தள்ளார்.

Tamil News