Tamil News
Home செய்திகள் இலங்கையை போன்று பல நாடுகள் மனித அவலத்தை சந்திக்கப்போவதாக ஐ.நா எச்சரிக்கை

இலங்கையை போன்று பல நாடுகள் மனித அவலத்தை சந்திக்கப்போவதாக ஐ.நா எச்சரிக்கை

தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள நாடுகள், இலங்கையைப் போன்ற அதே பொருளாதார கொந்தளிப்பையும் மனித அவலத்தையும் காணும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இலங்கையில் தற்போது வெளிவரும் ஒரு சோகமான நிகழ்வுகளை தற்போது காணமுடிகிறது.

பெற்றக்கடனை இலங்கை திருப்பிச் செலுத்தாமை தொடர்பில் கருத்து வெளியளிட்டுள்ள, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர், இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதை நாடுகளே கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இயல்புநிலை அடிப்படையில் நாடு அதன் கடனை செலுத்த முடியாதபோது, பொருளாதாரத்துக்கான அடிப்படை பகுதிகளை இறக்குமதி செய்ய முடியாது, அது பெற்றோலாக, டீசலாக, எரிபொருளாக அல்லது மருந்தாக இருக்கலாம் என்று ஸ்டெய்னர் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் புதிய தரவின்படி, உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 828 மில்லியனாக உயர்ந்துள்ளது.

2020 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 46 மில்லியனாகவும், கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் 150 மில்லியனாகவும் அது அதிகரித்துள்ள நிலையிலேயே ஸ்டெய்னரின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் அரசாங்கங்கள் தீர்க்கமான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், அது பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார். இதன்போது மக்களின் பொறுமையும் திறனும் இல்லாமல் போகும் சூழ்நிலையையும் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version