குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புமாறு ஐ.நா இலங்கை அரசிடம் கோரிக்கை

குறைந்த வருமானம் பெறும் மக்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் திட்டங்களை வகுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதில், ஒவ்வொரு நிறுவனத்திலும் சீர்திருத்தங்கள் வலுவான மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (13) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tamil News