Tamil News
Home செய்திகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவு

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவு

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிப்பதற்கு இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஆதரவளிக்க பிரித்தானியா முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரித்தானிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் £500 மில்லியன் புளூ பிளானட் நிதியம் இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், காலநிலைப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் உதவுகிறது என இராஜாங்க அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட 7 ஆண்டு கால, பிராந்திய இந்தோ-பசுபிக் திட்டமான காலநிலை நடவடிக்கையை (Climate Action for a Resilient Asia ) தொடங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

காலநிலை நிதியைத் திரட்டுதல், நீர் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் உள்ளூர் தழுவல் முயற்சிகளை வழிநடத்த உதவுதல், £274 மில்லியன் வரை செலவழித்தல் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் உட்பட இந்தோ-பசுபிக் முழுவதும் உள்ள நாடுகளுக்கு Climate Action for a Resilient Asia ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version