கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு தமிழ் பெண்கள் கைது

போலியான ஆவணங்களுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த இரு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரே  இவ்வாறு ஓமன் நாட்டுக்கு செல்ல முயற்சித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.