Tamil News
Home செய்திகள் தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையால் கைது

தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையால் கைது

தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்று இருந்தனர். அங்கு அவர்களை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் விசாரணை செய்த பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் மண்டபம் முகாமில் இருந்து தப்பியோடிய இருவரும், தமிழகத்தில் இருந்து படகொன்றில் சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் வேலணை கடற்பரப்பினூடாக இலங்கையை வந்தடைந்த போது கடல் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த , கடற்படையினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்  பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாக 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அவர்களை மண்டபம் முகாமில் தமிழக அரசு தங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version