இலங்கையில் இறப்பர் கைத்தொழில் முற்றாக வீழ்ச்சி-இலங்கை தேசிய கட்டுமான சங்கம்

இலங்கை வர்த்தகரால் ஒரு வருடத்திற்கு போதுமான மரப்பால் இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக இலங்கையில் இறப்பர் கைத்தொழில் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வரிகளால் இலங்கையில் உள்ள அனைத்து சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக காலியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.