உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன.
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் கொண்டிந்த, இன்று போன்றதொரு தினத்தில் இலங்கைத் தீவின் 8 இடங்கள் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்தன.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர்.
500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து- நூற்றுக்கணக்கானோர் அவையங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர்.