Tamil News
Home செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் கொண்டிந்த, இன்று போன்றதொரு தினத்தில்  இலங்கைத் தீவின் 8 இடங்கள் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்தன.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த  தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர்.

500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து- நூற்றுக்கணக்கானோர் அவையங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

Exit mobile version