கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு: கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான் மற்றும் உதவியாளர் டானியல் பூட் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர் என ரெலோ  ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“இச்சந்திப்பு  உயர்ஸ்தானிகரின்  உத்தியோகபூர்வ     இல்லத்தில் நடைபெற்றது.  இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ. கருணாகரம்,  வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதுள் அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்ட து. ஐநா மனித உரிமை பேரவையின் 46/1 பிரேரணைக்கு பிரதான பங்கு வகித்த நாடான கனடாவுடனான தமிழ் தரப்பின் மிகவும் அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு