தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானி கருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ் தானிகர் Sarah Hulton-னுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.