ரவிராஜ் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும்;சுமந்திரன் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை-சட்டவாளர் தேவதாஸ்

”ரவிராஜ் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும், ஆனால் இந்த முறை தனது சொந்த கட்சி மனிதர், சக வழக்கறிஞர் மற்றும் சக தமிழராலேயே கொல்லப்பட்டுள்ளார்.ஒரு மாமானிதரின் விதவைக்கு எதிராக சுமந்திரன் இத்தகைய மோசமான செயலில் ஈடுபடுவார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை”

மேற்கண்டவாறு கனடாவில் சட்டவாளராக இருக்கும் திருமதி சசிகலாவின் மைத்துனர் தேவதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் செரிவித்துள்ள அந்த செய்தியில்;

திருமதி ரவிராஜுடனான எனது உறவை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. திருமதி ரவீராஜ் எனது மைத்துனி ஆவார்.

ரவிராஜ் என் மனைவியின் சகோதரர். திருமதி ரவிராஜ் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், ஆனால் அவரிடமிருந்து அந்த வெற்றி சுமந்திரனால் கொள்ளையடிக்கப்பட்டது அல்லது ஏமாற்று சூழ்ச்சி மூலம் பறிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் பட்டியலில் 5 வது இடத்தில் இருந்த சுமந்திரன்,ரவிராஜ் அவர்களுடன் ஒருபோதும் நெருக்கமாக இருந்தவரல்ல.

சுமந்திரன் ஒரு சக வழக்கறிஞர், நான் அவருடன் மிகவும் நல்லுறவைக் கொண்டிருந்தேன்.கடந்த காலங்களில் அவர் டொராண்டோவுக்குச் வரும் , நான் அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருக்கு ஆதரவளித்தேன்.

ஒரு மாமானிதரின் விதவைக்கு எதிராக சுமந்திரன் இத்தகைய மோசமான செயலில் ஈடுபடுவார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ரவிராஜ் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும், ஆனால் இந்த முறை தனது சொந்த கட்சி மனிதர், சக வழக்கறிஞர் மற்றும் சக தமிழராலேயே கொல்லப்பட்டுள்ளார்.