ஜெனிவாவில் தமிழர் தரப்பின்பின்னடைவுக்கு காரணம் இதுதான்… | சிவஞானம் சிறிதரன் நேர்காணல் | ILC

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை பிரதான நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவிருக்கின்றது. இந்த நிலையில் ஜெனிவாவுக்கு வருகைதந்து தமிழ் மக்கள் சார்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்த வாரம் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு ஜெனிவா நிலைமைகள் தொடர்பாக வழங்கிய நோ்காணலின் முக்கியமான பகுதிகளை ‘இலக்கு’ வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.