சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்கின்றனர்- தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாட்டில் நடக்கும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என சிலர் திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை விளம்பரப்படுத்த அவர்கள் நம் மீது விமர்சனத்தை வைக்கின்றனர்

நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்றால், மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று கூறி வருகிறேன். அதை நீங்கள் செய்தால், மக்களை மட்டுமல்லாமல், இந்தியாவையும் காப்பாற்ற முடியும். உங்களிள் ஒத்துழைப்புடன் பணியை தொடர போகிறேன் என தெரிவித்துள்ளார்.