Tamil News
Home செய்திகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற இடமளிக்கப் போவதில்லை-ஜனாதிபதி

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற இடமளிக்கப் போவதில்லை-ஜனாதிபதி

இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, விசேட உரை நிகழ்த்திய போதே அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு போராட்டங்களை நடத்த முயற்சிக்கும் பட்சத்தில், இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version