Tamil News
Home செய்திகள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலிருந்த போது உயிரிழந்த பெண் – நீதி கோரி போராட்டம்

காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலிருந்த போது உயிரிழந்த பெண் – நீதி கோரி போராட்டம்

“அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் “என பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் இராகலை பகுதிகளில் உள்ள தோட்டங்களை சேர்ந்த மக்கள் கலந்துக் கொண்டனர்.

தொலைக்காட்சி நாடக பெண் தயாரிப்பாளரின் வீட்டில் மே 11 அன்று தனது வீட்டில் திருடப்பட்டதாக வெலிக்கடை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்து, பதுளை தெமோதர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குறித்த பெண் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பாகத் தெரிவித்து அவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Exit mobile version