ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த பாலஸ்தீன மக்களின் போராட்டம்-படையினரின் தாக்குதலில் 24 பேர்  காயம்

Palestinians Israel ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த பாலஸ்தீன மக்களின் போராட்டம்-படையினரின் தாக்குதலில் 24 பேர்  காயம்

பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலியப் படையினர் நேற்றைய தினம் நடத்தியத் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 24 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் – எகிப்திய முற்றுகையைக் (blockade) கண்டித்து கடந்த ஓகஸ்ட் 21 அன்று ஹமாஸ் படையினர் ஒருங்கிணைத்துப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை கைவிடவும், கடலோரப் பகுதியில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து காசாப்பகுதியை புனரமைக்கக் கோரியும் இந்தப் போராட்டம நடந்தது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட எண்ணற்ற பாலஸ்தீனர்கள் எல்லைப் பகுதி வேலியை நோக்கி சென்று, அங்கிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் மீது கற்கள் மற்றும் வெடிப் பொருட்களை வீசத்தொடங்கியதை அடுத்து போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தின்போது ஒரு இஸ்ரேலிய எல்லை காவல் படை அதிகாரிக்கு பலத்த காயமேற்பட்டுள்ளது.

இது குறித்த தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் படையினருக்கு சொந்தமான நான்கு  ஆயுத சேமிப்பு மற்றும் உற்பத்தி கிடங்கின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், பாலஸ்தீன எல்லைப்பகுதியில் கூடுதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னேட், இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். இராணுவம் எதற்கும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021