ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை-ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திற்கு கண்டனம்

மக்கள் போராட்டத்துக்கு ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை என வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை காலி முகத்திடலை ஆக்கிரமித்த முப்படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இரக்கமற்ற மற்றும் நெறிமுறையற்ற செயல் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணிக்குள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற ஆர்ப்பாட்டக்காரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்துவது வீண் என தேரர் தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த ஒரு நாடும் பலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்புகளை அடக்குவதற்கு மன்னிக்க முடியாது எனவும், சர்வதேச சமூகங்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளன எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.