Tamil News
Home செய்திகள் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி முன் வரவேண்டும்

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி முன் வரவேண்டும்

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் (11.04.2023) உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 25, 30 வருடங்களாக பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் நிரந்தர தீர்வை பெறவேண்டும் என்ற நிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது.அதேபோன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனத்திற்கொள்ளவேண்டும் என்றார்.

Exit mobile version