தென்னாபிரிக்காவின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆர்வம்

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TRC) நிறுவுவதற்கான வழியை ஆராய இலங்கையில் இருந்து பிரதிநிதிகள் குழுவொன்றை தென்னாபிரிக்காவிற்கு அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவிற்கு அறிவித்துள்ளார்.

நவம்பர் 16ஆம் திகதி இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற G-20 உச்சி மாநாட்டிற்குப் பின்னர் தென்னாபிரிக்காவுக்குத் திரும்பும் போது குறுகிய விஜயத்திற்காக நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி ரமபோசாவுடனான தனது சுருக்கமான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.