கொரோனா அச்சத்திற்கு மத்தியில் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுகின்றன.
இந்த வருடமும் கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில் தான் ஜப்பான், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.
ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என இதுவரை 80 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.