புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்கிறார்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று(21) பதவியேற்கவுள்ளார்.

இன்று(21) முற்பகல் பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பாராளுமன்றத்தில் நேற்று(20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் தெரிவு செய்துள்ளதாக அறிவித்து  வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.