Home செய்திகள் சத்துருக்கொண்டான் படுகொலை-உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சத்துருக்கொண்டான் படுகொலை-உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சத்துருக்கொண்டான் படுகொலைசத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சத்துருக் கொண்டானில் இடம்பெற்ற படுகொலையின் நினைவாக  அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தென்னை மற்றும் மஞ்சள் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

பனிச்சையடி, சத்துக்கொண்டான் கிராமமட்ட விழிப்புக்குழுவின் ஏற்பாட்டில் இந்த மரக்கன்றுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற படுகொலையில் சிக்கிய 60குடும்பங்களின் உறவினர்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

Exit mobile version