14 நாடுகள் இணைந்து உருவாக்கிய உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை!

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையின் பெயர் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை. இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கிறது. இதை உருவாக்குவதற்கான முதல் யோசனை 1923-ல் வந்தது. அதோடு இந்த சாலை 2 கண்டங்களை இணைக்கும் ஒரே பாதையாக கருதப்பட்டது. இருப்பினும், பின்னர் இந்த சாலை முக்கிய நெடுஞ்சாலைகளாக பிரிக்கப்பட்டது. இது அலாஸ்காவில் தொடங்கி அர்ஜென்டினாவில் முடிகிறது.

மொத்தம் 14 நாடுகள் இணைந்து இந்த நெடுஞ்சாலையை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா, பெரு, பனாமா, நிகரகுவா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், குவாத்தமாலா, எல் சால்வடார், கோஸ்டாரிகா, கொலம்பியா, சிலி, கனடா, பொலிவியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் தான் இவை. பல நாடுகளில் இந்த நெடுஞ்சாலையை அமைப்பதில் அமெரிக்கா அவர்களுக்கு உதவியது.

இந்த முழு நெடுஞ்சாலையும் எந்த இடையூறும் இல்லாமல் இருந்தாலும், அதன் ஒரு பகுதி (சுமார் 110 கி.மீ.) இதுவரை முடிக்கப்படவில்லை. அதனால் இது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இது பனாமாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் உள்ளது. இந்த பகுதி டேரியன் கேப் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என பல சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. மக்கள் பெரும்பாலும் இந்த பகுதியை படகு அல்லது விமானம் மூலம் கடந்து செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 500 கிலோமீட்டர் பயணம் செய்தாலும், இந்த தூரத்தை கடக்க சுமார் 60 நாட்கள் ஆகும். கார்லோஸ் சான்டாமரியா என்ற சைக்கிள் ரைடர் இந்த பாதையை 117 நாட்களில் கடந்து முடித்தார். அவரது சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.