சீன இராணுவ சீருடையை ஒத்த உடையுடன் வெளிநாட்டினர் திஸ்ஸமஹராமவில் இருப்பது குறித்து எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியிருந்தது.
இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண சீன தூதரகத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அத்துடன், இதுபோன்ற செயல்பாடுகள் இனி நிகழாமல் பார்க்குமாறும் அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சீனத் தூதரகம் அந்த ஆடை புனரமைப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களின் சீருடையே அது என்று விளக்கமளித்துள்ளது.