காணாமல்பாேனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவி நீக்க வேண்டும் – மனோ

காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என்றால் காணாமல் போனோர் தொடர்பாக முறையிடுவதற்காக காரியாலயம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது. தனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவிநீக்கம் செய்து, செயற்திறமையான ஒருரை நியமிக்கவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் தொடர்பாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்த கருத்து பதில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

காணாமல் போனாேர் தொடர்பாக ஆராய்ந்து விசாரணை நடத்த மிகவும் கஷ்டத்துடனே காரியாலயம் அமைத்தோம். ஆனால் தற்போதைய அதன் தலைவர், காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என தெரிவித்திருக்கின்றார்.

அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா என எனக்கு தெரியாது. ஏனேனில் காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என்றால், இதுதொடர்பாக ஆராய காரியாலயம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது.

அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவர் தொடர்பாக நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்க காரியாலயம் அமைக்க பாராளுமன்றத்தில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே அனுமதித்துக்கொண்டடோம். இதற்கு தற்போதுள்ள ஆளும்ரதப்பினரே எதிராக இருந்தனர்.

நான் அமைச்சராக இருக்கும்போது இதுதொடர்பான காரியாலயம் மாத்திறை, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நாங்கள் திறந்துவைத்தோம். எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் எங்களுக்கு வேலைசெய்ய இடமளிக்கவில்லை.

அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக தேடிக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு இல்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கின்றோம்.

அத்துடன் நாட்டில் 88, 89 காலப்பகுதியிலும் காணாமல் போனவர்கள் இருக்கின்றார். அதேபோன்று 2000ஆம் ஆண்டில் காணாமல் போனவர்களும் இருக்கின்றார்கள்.

வடக்கிலும் இடம்பெற்றது. தெற்கிலும் இது இடம்பெற்றது. அதனால் இந்த சாபத்தை நாட்டில் இருந்து முற்றாக துடைதெரிந்துவிடுவோம். அதற்காகத்தான் நாங்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய காரியாலயம் அமைத்தோம்.

 அதனால் நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்து அன்று இதற்கு தெரிவித்தாலும் நாங்கள் ஆதரவளிக்கின்றோம். ஆனால் அதன் தலைவரை மாற்றவேண்டும். அவரால் முறையாக செயற்பட முடியாது. அவரை வைத்துக்கொண்டு காரியாலயத்தின் பணிகளை மேற்கொள்ள முடியாது என்றார்.a