IMF உடனான உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தக்கூடாது – பேராசிரியர் ரொகான் சமரஜீவ

சர்வதேச நாணயநிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பொதுமக்களிற்கு தெரிவிக்ககூடாது என பேராசிரியர் ரொகான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,“இலங்கை தனக்கு கடன்வழங்கியவர்களுடன் இன்னமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதால் இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையிலான உடன்பாட்டினை பகிரங்கப்படுத்தக்கூடாது என்றார்.