சரக்கு கப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடல், அரபிக்கடல், ஏடன்வளைகுடா மற்றும் அதனை அண்டிய கடல் பாதைகளில் இந்தக் கப்பல் பயன்படுத்தவுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்புகின்றது. ஆனால், இதற்கான திகதியை இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலதிக கப்பல்களை செங்கடல் பகுதிக்கு அனுப்புவோம் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.