Home செய்திகள் செங்கடலுக்கு செல்வதற்கு கடற்படை தயார் – கடற்படைப் பேச்சாளா்

செங்கடலுக்கு செல்வதற்கு கடற்படை தயார் – கடற்படைப் பேச்சாளா்

SLNavy செங்கடலுக்கு செல்வதற்கு கடற்படை தயார் - கடற்படைப் பேச்சாளா்செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தி சர்வதேச கப்பல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட இலங்கைக் கடற் படையினருடன் கப்பல் ஒன்று அங்கு செல்லவுள்னது என்று கடற்படையின் பேச்சாளர் கயன் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

சரக்கு கப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடல், அரபிக்கடல், ஏடன்வளைகுடா மற்றும் அதனை அண்டிய கடல் பாதைகளில் இந்தக் கப்பல் பயன்படுத்தவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்புகின்றது. ஆனால், இதற்கான திகதியை இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலதிக கப்பல்களை செங்கடல் பகுதிக்கு அனுப்புவோம் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Exit mobile version