Tamil News
Home செய்திகள் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 2 ஆம் திகதியுடன் நிறைவு

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 2 ஆம் திகதியுடன் நிறைவு

இலங்கையில் பொதுத்  தேர்தல் பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக 12,985 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தேர்தல் கடமைகளுக்காக மூன்றரை இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version