ஜனாதிபதியுடனான பேச்சு எமக்கு திருப்தி தரவில்லை-  சுமந்திரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அதில் எந்த முன்னேற்றமும் இதுவரை காணப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஜனாபதியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் எட்டப்படாமல் நிறைவு பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.