பேச்சுவார்த்தை முடியும் வரை ஒப்பந்தத்தை வெளியிட வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது -ஜனாதிபதி

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையை தற்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடியும் வரை வெளியிட வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நாடு சர்வதேச நாணய நிதியத்தை அணுகிய போது சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், எனினும் இம்முறை ஏனைய நாடுகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“பாரிஸ் கிளப்பில் உறுப்பினராக இல்லாததால் ஜப்பான் இந்தியா மற்றும் சீனாவுடன் பேசுகிறது. திருத்தங்கள் நடக்கலாம்” என்றும் ஜனாதிபதி அவையில் தெரிவித்தார்.

“இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை முடியும் வரை வெளியிட வேண்டாம் என IMF தெரிவித்துள்ளது. நான் யாரையும் சிக்கலில் சிக்க வைக்கமாட்டேன். ஒப்பந்தம் கையெழுத்தாகி முடிந்தது. ஏனையவர்களும் கையெழுத்திட வேண்டும். மாற்றம் இருந்தால் நாங்கள் வருவோம். திரும்பி வந்து சொல்லுங்கள்.ஆனால் இதுவரை சீனாவும் இந்தியாவும் என்ன சொல்கிறார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை.நாம் ஏனைய தரப்பினருடனும், அதன் பின்னர் தனியார் கடன்காரர்களுடனும் விவாதிக்க வேண்டும். அதனால் இடைநிலை நிலை இல்லை.இதையே நான் உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்ல முடியும். இலக்குகள் மாறாது எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

கொள்கை வகுப்பாளர்கள் இளைஞர்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பிறக்காத குழந்தைகளின் உரிமைகளை புறக்கணித்தால் அதுவே மிக மோசமான இனப்படுகொலையாகும் என ரணில் தெரிவித்துள்ளார்.