கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாடங்கள் மாநாடு இன்று ஆரம்பம்

கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாடங்கள் மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது.

இந்த மாநாடு கொழுப்பில் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கடல்சார் மற்றும் தளவாடத் துறையின் பல்வேறு பங்குதாரர்கள் கூட்டாண்மைகளை உருவாக்கவும் இந்திய துணைக் கண்டம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய அதிக புரிதலை உருவாக்குவது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

முதலீட்டு வாய்ப்புகள், தகவல், தரவு மற்றும் பிராந்தியத்தின் திட்ட மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.