Home செய்திகள் மட்டக்களப்பில் சுவீனம் காரணமாக மரணமடைந்த இளம் ஊடகவியலாளரின் உடல் நல்லடக்கம்

மட்டக்களப்பில் சுவீனம் காரணமாக மரணமடைந்த இளம் ஊடகவியலாளரின் உடல் நல்லடக்கம்

IMG 7445 மட்டக்களப்பில் சுவீனம் காரணமாக மரணமடைந்த இளம் ஊடகவியலாளரின் உடல் நல்லடக்கம்

மட்டக்களப்பில் சுவீனம் காரணமாக மரணமடைந்த இளம் ஊடகவியலாளர் பாக்கியராஜா மோகனதாஸின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு, துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும் இளம் ஊடகவியலாளருமான  பாக்கியராசா மோகனதாஸ் (34வயது) நேற்று இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் காலமானார்.

இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் வீரகேசரியின் களுவாஞ்சிகுடி நிருபராகவும்,தினகரன் பத்திரிகையின் மண்டூர் குறுப், தமிழன் பத்திரிகையின் வீரமுனை நிருபராகவும் தனது ஊடகப் பயணத்தினை ஆரம்பித்திருந்தார்.

மேலும் இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில் பல வருட காலமாக கட்டுரைகள், அரசியல் வாதிகளின் பேட்டிகள்,கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறைப்படடதாரியாகவும் பல்துறைக் கலைஞராகவும் உள்ள இவருக்கு கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தினால் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருது வழங்கிகௌரவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.

இதையடுத்து அவரது  இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று நேற்று மாலை துறைநீலாவணை பொது மயானத்தில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

“அன்னாரின் மறைவு கவலைக்குரியது.அவரின் இழப்பானது கிழக்கு மாகாண ஊடகத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு“ என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version